என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Byமாலை மலர்11 Oct 2021 3:53 AM GMT (Updated: 11 Oct 2021 3:53 AM GMT)
ஜம்மு- காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவரும் நிலையில், பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப நாட்களாக பயங்கரவாதிகள், அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஸ்ரீநகரில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரம் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இதனால் உள்ளூர் போலீசார் உடன் இணைந்து பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகளை வேட்டையாட தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அனந்த்னாக் மற்றும் பந்துபோரா ஆகிய இடங்களில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் இம்தியாஸ் அகமது தார் எனத் தெரியவந்துள்ளது. இவர் பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... கிங் இஸ் பேக் - எம்.எஸ்.டோனிக்கு புகழாரம் சூட்டிய விராட் கோலி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X