என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீநகரில் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு: இரண்டு ஆசிரியர்கள் பலி
Byமாலை மலர்7 Oct 2021 8:07 AM GMT (Updated: 7 Oct 2021 10:01 AM GMT)
ஸ்ரீநகரில் உள்ள மிகவும் பழமையான நகரில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ஆசிரியர்கள் பலியான சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதிகளில் அடிக்கடி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை ஸ்ரீநகரில் உள்ள மிகவும் பழமையான நகரமான ஈத்கா-வில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் பள்ளியின் தாளாளர் மற்றும் ஒரு ஆசிரியர் என இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு-காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி ‘‘ஸ்ரீநகரில் இரண்டு ஆசிரியர்கள் பலியான பயங்கரமான செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எப்போது முடிவுக்கு வரும். நிர்வாகம் இப்போது சாதாரண நிலை என்ற வெற்று முழக்கங்களை முழங்குவதை நிறுத்துமா? குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’’ எனக் குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீரில் சாதாரண மக்கள் கொல்லப்படுவது கடந்த மூன்று நாட்களில் இது ஐந்தாவது சம்பவமாகும். நான்கு சம்பவங்கள் ஸ்ரீநகரில் மட்டுமே நடைபெற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X