என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் கட்சியை அழிக்க நாங்கள் ஏதும் செய்ய வேண்டியதில்லை: சிவராஜ் சிங் சவுகான்
Byமாலை மலர்30 Sep 2021 1:02 AM GMT (Updated: 30 Sep 2021 1:02 AM GMT)
காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சனம் செய்துள்ளார்.
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்து வந்த அமரிந்தர் சிங், சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது பதிவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை அமரிந்தர் சிங் ராஜினாமா செய்த நிலையில், சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பூசலை மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கிண்டல் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி குறித்து அவர் கூறுகையில் ‘‘சித்துவால் பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் நீக்கப்பட்டார். தற்போது சித்து கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். அந்த கட்சியை அழிக்க நாங்கள் ஏதும் செய்ய வேண்டியதில்லை. ராகுல் காந்தி அங்கே உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X