என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாஷிங் மெஷினில் படமெடுத்து ஆடிய நல்லபாம்பு
Byமாலை மலர்15 Sep 2021 8:29 AM GMT (Updated: 15 Sep 2021 8:29 AM GMT)
வாஷிங் மெஷினில் பாம்பு படம் எடுத்து ஆடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், மும்மிடிவரம் மண்டலம், மகிபால் செருவு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் தனது வீட்டில் உள்ள வாஷிங்மெஷினில் துணிகளை துவைப்பதற்காக வாஷிங்மெஷினை திறந்தார்.
அப்போது வாஷிங் மெஷினில் பதுங்கியிருந்த நல்லபாம்பு திடீரென படமெடுத்து ஆடியது. இதனைக் கண்ட ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். வாஷிங்மெஷினில் பாம்பு இருக்கும் தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கூடி வேடிக்கை பார்த்தனர்.
ஒரு சிலர் தங்களது செல்போனில் பாம்பு படம் எடுத்து ஆடுவதை பதிவு செய்தனர். இதையடுத்து இதே பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வர்மா என்பவரை அழைத்து வந்து பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.
வாஷிங் மெஷினில் பாம்பு படம் எடுத்து ஆடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
மற்றொரு சம்பவம்...
இதேபோல் நேற்று காலை திருப்பதி அடுத்த பாபவிநாசம் வேணுகோபாலசாமி கோவில் அருகே உள்ள ஓட்டலில் வேலை செய்யும் பணியாளர்கள் ஒரு அறையில் தங்கி உள்ளனர்.
அந்த அறையில் இருந்த பீரோவில் உஸ் உஸ் என சத்தம் வந்தது. பீரோவை திறந்து பார்த்தபோது அதில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடியதை கண்ட ஊழியர்கள் அறையைவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான பாம்பு பிடிக்கும் பாஸ்கர் நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர் அவர் சம்பவ இடத்திற்கு வந்து பீரோவில் இருந்த நல்ல பாம்பை பிடித்து சென்று சேஷாசலம் வனப்பகுதியில் விட்டார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், மும்மிடிவரம் மண்டலம், மகிபால் செருவு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் தனது வீட்டில் உள்ள வாஷிங்மெஷினில் துணிகளை துவைப்பதற்காக வாஷிங்மெஷினை திறந்தார்.
அப்போது வாஷிங் மெஷினில் பதுங்கியிருந்த நல்லபாம்பு திடீரென படமெடுத்து ஆடியது. இதனைக் கண்ட ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். வாஷிங்மெஷினில் பாம்பு இருக்கும் தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கூடி வேடிக்கை பார்த்தனர்.
ஒரு சிலர் தங்களது செல்போனில் பாம்பு படம் எடுத்து ஆடுவதை பதிவு செய்தனர். இதையடுத்து இதே பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வர்மா என்பவரை அழைத்து வந்து பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.
வாஷிங் மெஷினில் பாம்பு படம் எடுத்து ஆடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
மற்றொரு சம்பவம்...
இதேபோல் நேற்று காலை திருப்பதி அடுத்த பாபவிநாசம் வேணுகோபாலசாமி கோவில் அருகே உள்ள ஓட்டலில் வேலை செய்யும் பணியாளர்கள் ஒரு அறையில் தங்கி உள்ளனர்.
அந்த அறையில் இருந்த பீரோவில் உஸ் உஸ் என சத்தம் வந்தது. பீரோவை திறந்து பார்த்தபோது அதில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடியதை கண்ட ஊழியர்கள் அறையைவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான பாம்பு பிடிக்கும் பாஸ்கர் நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர் அவர் சம்பவ இடத்திற்கு வந்து பீரோவில் இருந்த நல்ல பாம்பை பிடித்து சென்று சேஷாசலம் வனப்பகுதியில் விட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X