search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கணவன் பானி பூரி வாங்கி வந்ததால் தகராறு: விஷம் குடித்து பெண் தற்கொலை

    கணவனுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த பெண், தன்னிடம் கேட்காமல் பானி பூரி வாங்கி வந்ததால் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
    மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்தவர் பிரதிக்‌ஷா. இவர் அம்பேகான் பகுதியில் வசித்து வரும் காகினிநாத் (வயது 33) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

    திருமணம் முடிந்த நாளில் இருந்தே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிரதிக்‌ஷா வீட்டில் சமையல் செய்து வைத்துள்ளார். ஆனால் அவரது கணவன் காகினிநாத் தெருக்கடையில் இருந்து பானி பூரி வாங்கி வந்துள்ளார்.

    தான் வீட்டில் சமையல் செய்து வைத்திருக்கும் நிலையில், எப்படி வெளியில் இருந்து பானி பூரி வாங்கி வரலாம் எனக் கூறி கணவருடன் சண்டை போட்டுள்ளார். அத்துடன் நிறுத்தாமல் விரக்தியில் விஷம் அருந்தியுள்ளார். உயிருக்குப் போராடிய பிரதிக்‌ஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    பானி பூரி தகராறில் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×