search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடன் தொல்லையால் நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி சலூன் தொழிலாளி தற்கொலை

    கேரள மாநிலம் இடுக்கி அருகே கடன் தொல்லையால் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி சலூன் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் தீபு(வயது34). இவர் இந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

    கேரளாவில் பரவி வரும் கொரோனா காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தீபு குடும்ப செலவிற்கு கூட வருமானம் இல்லாமல் தவித்தார். இதற்காக அவர் பலரிடம் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

    கடை திறக்கப்படாததாலும், போதிய வருமானம் இல்லாததாலும் தீபுவால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த தீபு வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மெசேஜ் அனுப்பி உள்ளார்.

    இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக தீபுவின் வீட்டிற்கு வந்தனர். அப்போது தீபுவின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது தீபு படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதனால் அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து தொடுபுழா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    Next Story
    ×