என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது கட்டமாக இலவச சமையல் கியாஸ் திட்டத்தை மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
Byமாலை மலர்9 Aug 2021 10:42 AM GMT (Updated: 9 Aug 2021 10:42 AM GMT)
உத்தரபிரதேச மாநிலம் மஹோபா நகரில் உள்ள பயனாளிகளுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
புதுடெல்லி:
பிரதமரின் இலவச சமையல் கியாஸ் இணைப்பு திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 5 கோடி ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் இலக்குடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
பின்னர் இந்த திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளை சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக 8 கோடி பேருக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்குவதற்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த இலக்கையும் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அடைந்து 8 கோடி பேருக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘பிரதம மந்திரி உஜ்வல் யோஜனா 2.0’ எனப்படும் பிரதமரின் இலவச சமையல் கியாஸ் இணைப்பு திட்டத்தின் 2-வது கட்டத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
காணொலி முறையில் பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநிலம் மஹோபா நகரில் உள்ள பயனாளிகளுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
பிரதமரின் இலவச சமையல் கியாஸ் இணைப்பு திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 5 கோடி ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் இலக்குடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
பின்னர் இந்த திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளை சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக 8 கோடி பேருக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்குவதற்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த இலக்கையும் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அடைந்து 8 கோடி பேருக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘பிரதம மந்திரி உஜ்வல் யோஜனா 2.0’ எனப்படும் பிரதமரின் இலவச சமையல் கியாஸ் இணைப்பு திட்டத்தின் 2-வது கட்டத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
காணொலி முறையில் பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநிலம் மஹோபா நகரில் உள்ள பயனாளிகளுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X