என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Byமாலை மலர்4 Aug 2021 2:20 PM GMT (Updated: 4 Aug 2021 2:20 PM GMT)
நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 13-ந்தேதி தொடங்கியது. நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஆகஸ்ட் 10ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 13-ந்தேதி தொடங்கியது. நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஆகஸ்ட் 10ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நிறுவனங்களால் பயன்படுத்தப்படுவதால், சுகாதார அறிவியல் இயக்குநரகம் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவு, பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கேரளாவில் கட்டுக்குள் வராத கொரோனா... இந்த பகுதிகளில் எல்லாம் மும்மடங்கு ஊரடங்கு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X