என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க.வில் இணைந்தார் மணிப்பூர் முன்னாள் காங்கிரஸ் தலைவர்
Byமாலை மலர்1 Aug 2021 8:05 AM GMT (Updated: 1 Aug 2021 8:05 AM GMT)
மணிப்பூரில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்களை இழுக்கும் பணியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.
மணிப்பூரில் முதல் மந்திரி பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரின் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கோவிந்தாஸ் கொந்தவுஜம் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளார். அவர் முதல் மந்திரி பைரன் சிங் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்ட கோவிந்தாஸ், தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். பின்னர் அவர் ‘‘பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்கள் மீது கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய மந்திரி சபையில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மோடி அரசை வலிமையாக்க மணிப்பூர் உறுதியளிக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X