என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Byமாலை மலர்23 July 2021 10:22 AM GMT (Updated: 23 July 2021 10:22 AM GMT)
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டைகளில் இதுவரை சுமார் 80 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் வார்போரா என்ற இடத்தில் முற்றுகையிட்டு சோதனை நடத்தினார்கள். வனப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு வீட்டுக்குள் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை சரணடையுமாறு பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர். ஆனால் பயங்கரவாதிகள் சரணடைய மறுத்துவிட்டனர்.
திடீரென பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து சரமாரியாக சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இன்று அதிகாலைவரை துப்பாக்கி சூடு நீடித்தது.
பயங்கரவாதிகள் ஒருகட்டத்தில் தப்பி செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடியில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் பயாஸ் என்று தெரியவந்துள்ளது. அவன் காஷ்மீரில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவன்.
இந்த ஆண்டு முதல் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டைகளில் இதுவரை சுமார் 80 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் வார்போரா என்ற இடத்தில் முற்றுகையிட்டு சோதனை நடத்தினார்கள். வனப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு வீட்டுக்குள் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை சரணடையுமாறு பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர். ஆனால் பயங்கரவாதிகள் சரணடைய மறுத்துவிட்டனர்.
திடீரென பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து சரமாரியாக சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இன்று அதிகாலைவரை துப்பாக்கி சூடு நீடித்தது.
பயங்கரவாதிகள் ஒருகட்டத்தில் தப்பி செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடியில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் பயாஸ் என்று தெரியவந்துள்ளது. அவன் காஷ்மீரில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவன்.
இந்த ஆண்டு முதல் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டைகளில் இதுவரை சுமார் 80 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X