search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    இந்தியாவின் பொருளாதார அமைப்பில் ஜி.எஸ்.டி. ஒரு மைல்கல் - மோடி புகழாரம்

    இந்திய பொருளாதார அமைப்பில் ஜி.எஸ்.டி. ஒரு மைல்கல்லாக திகழ்ந்து வருவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்
    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்திய பொருளாதார அமைப்பில் ஜி.எஸ்.டி. ஒரு மைல்கல்லாக திகழ்ந்து வருகிறது. அந்த வரி, வெளிப்படைத்தன்மையையும், வரி செலுத்துவதையும் கணிசமாக அதிகாித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் வசூலும் அதிகரித்துள்ளது.

    அதுபோல், இதுவரை இருந்த வரிகளின் எண்ணிக்கையை குறைத்திருப்பதுடன், சாதாரண மக்கள் மீதான வரிச்சுமையையும் குறைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×