என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு - கூடுதலாக 2 பேரணிகள் நடத்த விவசாய அமைப்புகள் முடிவு
Byமாலை மலர்26 Jun 2021 1:20 PM GMT (Updated: 26 Jun 2021 1:20 PM GMT)
எங்களுடைய போராட்ட விசயங்களை வலுப்படுத்துவது என முடிவு செய்துள்ளதாக விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
நாட்டில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை நோக்கி கடந்த ஆண்டு நவம்பர் 26ந்தேதி விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர்.
இன்றுடன் 8 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவசாய அமைப்புகள் ஆலோசனை மேற்கொண்டன. இதன்பின்னர் பாரதிய விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாய்த் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.
அவர் கூறும்போது, இன்றைய கூட்டத்தில் எங்களுடைய போராட்ட விசயங்களை வலுப்படுத்துவது என முடிவு செய்துள்ளோம். அதற்காக கூடுதலாக 2 பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதன்படி, வரும் ஜூலையில் 9 மற்றும் 24 ஆகிய நாட்களில் டிராக்டர் பேரணி நடைபெறும். வரும் ஜூலை 9ந்தேதியில் சாம்லி மற்றும் பாக்பத் நகர மக்களும், வரும் ஜூலை 24ந்தேதியில் பிஜ்னோர் மற்றும் மீரட் நகர மக்களும் பேரணியில் பங்கு பெறுவார்கள் என கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X