search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வரின் பாதுகாவலர், போலீசார் இடையே ஏற்பட்ட மோதல்
    X
    முதல்வரின் பாதுகாவலர், போலீசார் இடையே ஏற்பட்ட மோதல்

    முதல் மந்திரியின் பாதுகாவலருடன் போலீசார் மோதல்

    இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர், நிதின் கட்கரியுடன் குல்லு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    சிம்லா:

    இமாச்சலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர், மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் குல்லு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

    முன்னதாக வாகன அணிவகுப்பின்போது பாதுகாப்பில் இருந்த மாவட்ட போலீசாருக்கும், முதல்வரின் பாதுகாவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டையாக மாறியது. அப்போது குல்லு போலீஸ் சூப்பிரண்டு, முதல்-மந்திரியின் பாதுகாவலரை அறைந்ததாக கூறப்படுகிறது. 

    “இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில டி.ஜி.பி. 3 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் நிருபர்களிடம் கூறினார்.
    Next Story
    ×