என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சந்திக்கும் நாளை எதிர்பார்க்கிறேன்... இஸ்ரேல் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து
Byமாலை மலர்14 Jun 2021 5:07 AM GMT (Updated: 14 Jun 2021 5:07 AM GMT)
இஸ்ரேல் புதிய பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இஸ்ரேல் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட்(49), இஸ்ரேல் பிரதமராக பதவியேற்றார்.
இஸ்ரேலில் நப்தாலி-பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் புதிய பிரதமருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார்
இந்நிலையில், இஸ்ரேல் புதிய பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மரியாதைக்குரிய நப்தாலி பென்னட், இஸ்ரேலின் பிரதமர் ஆனதற்கு எனது வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு தூதரக உறவுகள் மேம்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளை நாம் கொண்டாடும் சமயத்தில், நான் தங்களைச் சந்திக்கவும், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை ஆழப்படுத்தவும் எதிர்நோக்கியிருக்கிறேன்’ என கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X