search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்
    X
    ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்

    ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்

    தமிழ்நாட்டில் மட்டும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் 4 ஆயிரத்து 941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்துவ ஆக்சிஜனை டேங்கர்களில் அடைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் வினியோகிக்கும் பணி, கடந்த ஏப்ரல் 24-ந் தேதி தொடங்கியது. இவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுகின்றன.

    நாடு முழுவதும் இந்த ரெயில்கள் மூலம் இதுவரை 30 ஆயிரத்து 182 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1,734 டேங்கர்களில் அடைத்து, 421 ரெயில்கள் மூலம் இவை வினியோகிக்கப்பட்டு உள்ளன.

    தமிழ்நாட்டில் மட்டும் 4 ஆயிரத்து 941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டது.
    Next Story
    ×