என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க டொமினிக்கா கோர்ட்டு மறுப்பு
Byமாலை மலர்12 Jun 2021 11:11 AM GMT (Updated: 12 Jun 2021 11:13 AM GMT)
மெகுல் சோக்சி டொமினிக்கா நாட்டு ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்தார். நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தார்.
புதுடெல்லி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரிகள் நிரவ்மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்கள்.
அதில் நிரவ் மோடி லண்டன் ஜெயிலில் இருக்கிறார். மெகுல் சோக்சி கரீபியன் பகுதியில் உள்ள ஆன்டிகுவா நாட்டுக்கு தப்பி ஓடினார். அங்கிருந்து அவரை இந்தியா கொண்டு வர முயற்சித்த நிலையில் அவர் கியூபாவுக்கு தப்பி செல்ல முயன்றார்.
அப்போது இடையில் டொமினிக்கா போலீசார் அவரை கைது செய்தனர். அந்த நாட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வர மத்திய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே மெகுல் சோக்சி, டொமினிக்கா நாட்டு ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்தார். அது விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தார்.
மேலும் மெகுல் சோக்சியை இந்த நாட்டில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
விரைவில் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரிகள் நிரவ்மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்கள்.
அதில் நிரவ் மோடி லண்டன் ஜெயிலில் இருக்கிறார். மெகுல் சோக்சி கரீபியன் பகுதியில் உள்ள ஆன்டிகுவா நாட்டுக்கு தப்பி ஓடினார். அங்கிருந்து அவரை இந்தியா கொண்டு வர முயற்சித்த நிலையில் அவர் கியூபாவுக்கு தப்பி செல்ல முயன்றார்.
அப்போது இடையில் டொமினிக்கா போலீசார் அவரை கைது செய்தனர். அந்த நாட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வர மத்திய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே மெகுல் சோக்சி, டொமினிக்கா நாட்டு ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்தார். அது விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தார்.
மேலும் மெகுல் சோக்சியை இந்த நாட்டில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
விரைவில் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X