என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிசம்பர் மாதத்துக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி - ஜே.பி.நட்டா தகவல்
Byமாலை மலர்10 Jun 2021 9:41 PM GMT (Updated: 10 Jun 2021 9:41 PM GMT)
கொரோனாவை எதிர்கொள்ள நிலம், நீர், ஆகாய மார்க்கமாக பிரதமர் மோடி ஆக்சிஜன் கொண்டு வந்ததாக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
புதுடெல்லி:
அருணாசலபிரதேசத்தில் பா.ஜனதா கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனாவை எதிர்கொள்ள மோடி தலைமையிலான இந்திய அரசு தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்ட விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அது பாராட்டத்தக்கது. இந்தியாவின் வலிமையை காட்டுகிறது.
கொரோனா விசுவரூபம் எடுத்தபோது, மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மோடி எந்த வாய்ப்பையும் விட்டு வைக்காமல், நிலம், நீர், ஆகாய மார்க்கமாக ஆக்சிஜனை கொண்டுவந்து ஒரு வாரத்தில் தட்டுப்பாட்டை போக்கினார். 900 டன்னாக இருந்த ஆக்சிஜன் உற்பத்தி, 9 ஆயிரத்து 446 டன்னாக அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் போலியோ, தட்டம்மை போன்றவற்றை ஒழிப்பதற்கான தடுப்பூசி தயாராவதற்காக 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால், கொரோனா இந்தியாவுக்கு வந்த 9 மாதங்களில் மோடி அரசு 2 தடுப்பூசிகளை உருவாக்கி விட்டது.
முதலில் 2 நிறுவனங்கள்தான் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டன. தற்போது, 13 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் 19 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடும். அதன்மூலம் இந்தியாவிடம் 200 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருக்கும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் கட்சி சந்தேகமும், வதந்தியும் எழுப்பியது. அதன்மூலம் தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க பார்த்தது.
ஆரம்பத்தில் நாட்டில் ஒரே ஒரு கொரோனா பரிசோதனை நிலையம் இருந்தநிலையில், தற்போது 2 ஆயிரத்து 500 நிலையங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 1,500 மாதிரிகளை பரிசோதித்து வந்த நாம், தற்போது 25 லட்சம் மாதிரிகளை பரிசோதித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அருணாசலபிரதேசத்தில் பா.ஜனதா கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனாவை எதிர்கொள்ள மோடி தலைமையிலான இந்திய அரசு தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்ட விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அது பாராட்டத்தக்கது. இந்தியாவின் வலிமையை காட்டுகிறது.
கொரோனா விசுவரூபம் எடுத்தபோது, மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மோடி எந்த வாய்ப்பையும் விட்டு வைக்காமல், நிலம், நீர், ஆகாய மார்க்கமாக ஆக்சிஜனை கொண்டுவந்து ஒரு வாரத்தில் தட்டுப்பாட்டை போக்கினார். 900 டன்னாக இருந்த ஆக்சிஜன் உற்பத்தி, 9 ஆயிரத்து 446 டன்னாக அதிகரித்துள்ளது.
முதலில் 2 நிறுவனங்கள்தான் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டன. தற்போது, 13 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் 19 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடும். அதன்மூலம் இந்தியாவிடம் 200 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருக்கும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் கட்சி சந்தேகமும், வதந்தியும் எழுப்பியது. அதன்மூலம் தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க பார்த்தது.
ஆரம்பத்தில் நாட்டில் ஒரே ஒரு கொரோனா பரிசோதனை நிலையம் இருந்தநிலையில், தற்போது 2 ஆயிரத்து 500 நிலையங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 1,500 மாதிரிகளை பரிசோதித்து வந்த நாம், தற்போது 25 லட்சம் மாதிரிகளை பரிசோதித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X