search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

    கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 464 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,554 ஆக உயர்ந்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று கர்நாடகாவில் இன்று 14,304 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,18,735 ஆக அதிகரித்துள்ளது.  

    மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 464 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,554 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 29,271 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,90,861 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 2,98,299 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
    Next Story
    ×