என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரிசோதனையா? - பயந்து வனப்பகுதிக்குள் சென்று ஒளிந்து கொண்ட கிராம மக்கள்
Byமாலை மலர்30 May 2021 6:15 PM GMT (Updated: 30 May 2021 6:15 PM GMT)
உத்தரகாண்டில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஒரு கிராமே வனப்பகுதிக்குள் ஒளிந்த கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பித்தோராகர்:
உத்தரகாண்டில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஒரு கிராமமே கூண்டோடு தப்பித்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் ஒளிந்துகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
பித்தோராகார் பகுதியில், அலுத்தாரி மற்றும் ஜாம்தாரி என்ற கிராமங்களில் சுகாதாரத்த்துறை அதிகாரிகள் தொற்று பரிசோதனை மேற்கொண்ட தகவல் அருகே இருந்த குட்டா சதுரானி என்ற கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள பெரும்பாலானோர் பரிசோதனைக்கு பயந்து அருகில் இருந்த வனப்பகுதிக்கு தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
பரிசோதனை மேற்கொண்டால் தான் தாங்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாவோம் என அந்த பழங்குடியினர் பயப்படுவதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளதால், அந்த சமூகத்தில் ஓரளவு படித்தவர்கள் மூலம் பழங்குடியின மக்களுக்கு கொரோனா பரிசோதனை குறித்து எடுத்துக்கூற அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பரிசோதனை செய்ய வந்த அதிகாரிகளுக்கு கிராம மக்கள் டிமிக்கு கொடுத்து வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்டில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஒரு கிராமமே கூண்டோடு தப்பித்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் ஒளிந்துகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
பித்தோராகார் பகுதியில், அலுத்தாரி மற்றும் ஜாம்தாரி என்ற கிராமங்களில் சுகாதாரத்த்துறை அதிகாரிகள் தொற்று பரிசோதனை மேற்கொண்ட தகவல் அருகே இருந்த குட்டா சதுரானி என்ற கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள பெரும்பாலானோர் பரிசோதனைக்கு பயந்து அருகில் இருந்த வனப்பகுதிக்கு தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
கொரோனா பரிசோதனை செய்ய வந்த அதிகாரிகளுக்கு கிராம மக்கள் டிமிக்கு கொடுத்து வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X