என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தர பிரதேசத்தில் சோகம்- 22 பேரின் உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்
Byமாலை மலர்29 May 2021 10:42 AM GMT (Updated: 29 May 2021 10:42 AM GMT)
கள்ளச்சாராய பலி தொடர்பாக கலால் துறையைச் சேர்ந்த மாவட்ட கலால் அதிகாரி உள்ளிட்ட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் மதுபானம் அருந்திய பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லோதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்சுவா, அண்ட்லா கிராமங்கள், ஜவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேரத் கிராமத்தைச் சேர்ந்த பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. வியாழக்கிழமை முதல் இன்று வரை கர்சுவா, அண்ட்லா, சேரத் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து பாதிக்கப்படுவோர் குறித்த தகவல் வெளியாகின்றன. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிக போதை தரும் போலியான மதுபானதை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராய தொழில் நடத்தி வரும் முக்கிய புள்ளியாக கருதப்படும் அனில் சவுத்ரி உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 2 முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கலாநிதி நைதானி அறிவித்துள்ளார்.
இதுதவிர துறைரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. கலால் துறையைச் சேர்ந்த மாவட்ட கலால் அதிகாரி உள்ளிட்ட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட கிராமங்களின் அருகில் உள்ள லைசென்ஸ் பெற்ற மதுக்கடைகளும் சீல் வைக்கப்பட்டன. அந்த கடைகளில் உள்ள மதுபானங்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அலிகார் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் செயல்படும் சுமார் 500 மதுபானக்கடைகளும் மூடப்பட்டன. போலி மதுபானம் தொடர்பான விசாரணை முடியும் வரை அந்த கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X