search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்புப் பணியில் வீரர்கள்
    X
    மீட்புப் பணியில் வீரர்கள்

    மகாராஷ்டிராவில் சோகம் - கட்டிடம் இடிந்த விபத்தில் 5 பேர் பலி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சிக்கி 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உல்லாஸ் நகர் பகுதியில் அமைந்த கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி திடீரென இன்று இடிந்து விழுந்தது.

    தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் இடிபாடுகளில் இருந்து 11 பேரை உயிருடன் மீட்டனர். காயமடைந்த அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த கட்டிட விபத்தில் 12 வயது சிறுவன் உள்பட 5 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி நடந்துவருகிறது.
    Next Story
    ×