search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிர மாநில அமைச்சர் ராஜேஷ் தோபே
    X
    மகாராஷ்டிர மாநில அமைச்சர் ராஜேஷ் தோபே

    மகாராஷ்டிராவில் இன்றைய பாதிப்பு 46,781: மேலும் 15 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என்கிறார் அமைச்சர்

    அமைச்சரவை கூட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் மந்திரிகள் லாக்டவுனை நீட்டிக்க பரிந்துரை செய்தனர் என்று மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,781 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58,805 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 816 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக 52,26,710 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 46,00,196 பேர் குணமடைந்துள்ளனர். 78,007 பேர் உயிரிழந்துள்ளனர். 5,46,129 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே இன்று மகாராஷ்டிர மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் மந்திரிகள் லாக்டவுனை மேலும் 15 நாட்கள் நீட்டிக்க பரிந்துரை செய்தனர். முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×