என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று மேற்கு வங்காளம் செல்கிறார்
Byமாலை மலர்3 May 2021 9:06 PM GMT (Updated: 3 May 2021 9:06 PM GMT)
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசார் தேர்தலில் தோல்வியடைந்த பாஜகவினர் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த மேற்கு வங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிஎம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.
ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்கு வங்காள முதல்மந்திரி பதவியேற்க உள்ளார். மம்தா பானர்ஜியின் பதவியேற்பு விழா மே 5-ம் தேதி (நாளை ) எந்தவித ஆடம்பரமின்றி சுலபமான முறையில் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசார் தேர்தலில் தோல்வியடைந்த பாஜகவினர் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று பாஜக அலுவலகங்கள், பாஜக ஆதரவாளர்களின் வீடுகளை குறிவைத்து திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த தாக்குதல் தொடர்பாக சமூகவலைதளங்களில் பல்வேறு வீடியோக்களும் வெளியாகின.
மேலும், தேர்தல் வெற்றிக்கு பின்னர் திரிணாமுல் காங்கிரசால் நடத்திய கொடூர தாக்குதலில் நேற்று மட்டும் தங்கள் கட்சி தொண்டர்கள் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
நூற்றுக்கணக்கான பாஜக அலுவலகங்களும், பாஜக தொண்டர்களின் வீடுகளும் திரிணாமுல் காங்கிரசாரால் சூரையாடப்பட்டதாகவும், பாஜக தொண்டர்கள் பலர் தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பாஜக கட்சியினர் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா 2 நாள் பயணமாக மே 4ம் தேதி (இன்று) மேற்கு வங்காளம் செல்கிறார். இந்த பயணத்தின்போது, திரிணாமுல் காங்கிரசாரால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பாஜக தொண்டர்களையும் ஜேபி நட்டா சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் முதல் முறையாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மேற்கு வங்காளம் செல்வது அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத்தப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த மேற்கு வங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிஎம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.
ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்கு வங்காள முதல்மந்திரி பதவியேற்க உள்ளார். மம்தா பானர்ஜியின் பதவியேற்பு விழா மே 5-ம் தேதி (நாளை ) எந்தவித ஆடம்பரமின்றி சுலபமான முறையில் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசார் தேர்தலில் தோல்வியடைந்த பாஜகவினர் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று பாஜக அலுவலகங்கள், பாஜக ஆதரவாளர்களின் வீடுகளை குறிவைத்து திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த தாக்குதல் தொடர்பாக சமூகவலைதளங்களில் பல்வேறு வீடியோக்களும் வெளியாகின.
மேலும், தேர்தல் வெற்றிக்கு பின்னர் திரிணாமுல் காங்கிரசால் நடத்திய கொடூர தாக்குதலில் நேற்று மட்டும் தங்கள் கட்சி தொண்டர்கள் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பாஜக கட்சியினர் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா 2 நாள் பயணமாக மே 4ம் தேதி (இன்று) மேற்கு வங்காளம் செல்கிறார். இந்த பயணத்தின்போது, திரிணாமுல் காங்கிரசாரால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பாஜக தொண்டர்களையும் ஜேபி நட்டா சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் முதல் முறையாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மேற்கு வங்காளம் செல்வது அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X