என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து
Byமாலை மலர்2 May 2021 11:05 AM GMT (Updated: 2 May 2021 11:05 AM GMT)
தி.மு.க. கூட்டணி அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 157 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தனிப்பட்ட முறையில் 4 மணியளவில் திமுக 118 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X