என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
18 வயதானோருக்கு 1-ந்தேதி முதல் தடுப்பூசி: ஒரே நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு
Byமாலை மலர்30 April 2021 2:22 AM GMT (Updated: 30 April 2021 2:22 AM GMT)
கொரோனா தடுப்பூசியை நேரடியாக தடுப்பூசி மையத்துக்கு வந்து 18 வயதானோர் போட்டுக்கொள்ள அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஜனவரி 16-ந்தேதி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் 3-ம் கட்டமாக 18 வயதான அனைவருக்கும் மே 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியை நேரடியாக தடுப்பூசி மையத்துக்கு வந்து 18 வயதானோர் போட்டுக்கொள்ள அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான 18 வயதானவர்கள் கோவின் தளத்தில் அல்லது ஆரோக்கியசேது செயலியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த முன்பதிவு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தொடங்கியது.
நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இளைஞர்களும், இளம்பெண்களும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். நேற்று முன்தினம் முன்பதிவு தொடங்கிய உடனேயே அவர்கள் முன்பதிவு செய்யத்தொடங்கி விட்டனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயற்சித்ததால் ஓ.டி.பி. என்னும் ஒரே நேர கடவுச்சொல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் காத்திருந்து இளையதலைமுறையினர் பதிவு செய்தனர்.
இந்த வகையில் முதல் நாளில் முன்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் 35 லட்சம் பேரும், 3 மணி நேரத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துவிட்டனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
24 மணி நேரத்தில் 1.33 கோடிப்பேர் இப்படி முன்பதிவு செய்துள்ளனர் எனவும், இந்தியாவில் 18-44 வயதினர் 59.46 கோடிப்பேர் இருக்கின்றனர் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X