என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்ப்பிணி பெண்களுக்கு உதவுவதற்காக வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது தேசிய மகளிர் ஆணையம்
Byமாலை மலர்29 April 2021 12:32 PM GMT (Updated: 29 April 2021 12:32 PM GMT)
கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு உதவ தேசிய மகளிர் ஆணையம் முன்வந்துள்ளது.
இந்தியாவில் 2-வது அலை காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகமிக முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே வந்தால் போதுமானது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் தொற்றால் கர்ப்பிணி பெண்களும் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஒருவேளை தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்தவ சிகிச்சை பெற சிரமம் ஏற்படலாம். அப்போது அவர்களும், அவர்களது வயிற்றில் வளரும் குழந்தையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால் அவசர உதவி வேண்டுமென்றால், வாட்ஸ்அப்பில் ‘9354954224’ என்ற நம்பரை உதவிக்கு நாடலாம் என தேசிய மகளிர் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X