என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உணவின்றி வாடும் மக்களுக்கு உணவு வழங்கும் இஸ்கான் கோவில்
Byமாலை மலர்29 April 2021 6:19 AM GMT (Updated: 29 April 2021 6:19 AM GMT)
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவின்றி வாடும் மக்களுக்கு டெல்லி இஸ்கான் கோவில் சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஒவொரு நாளும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பரவலாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளால் வறுமையில் வாடுவோரின் நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. வேலைக்கும் செல்ல முடியாமல் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அல்லல்படுவோரும் உள்ளனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உதவிகளை செய்கின்றனர்.
அவ்வகையில், டெல்லியில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்கு டெல்லி இஸ்கான் கோவில் நிர்வாகம் இலவச உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இஸ்கான் கோவிலின் இளம் துறவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பசியால் வாடும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு வழங்கிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X