என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் தயாரிப்பு- ஒருவர் சிக்கினார்
Byமாலை மலர்12 April 2021 5:43 AM GMT (Updated: 12 April 2021 5:43 AM GMT)
மேற்கு வங்காள மாநிலம் கூஜ்பெகர் மாவட்டத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கொல்கத்தா:
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் மோதல்கள் அதிகரித்துள்ளதால், மத்திய பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. கூஜ்பெகர் மாவட்டத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாத்பரா பகுதியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் நேற்று இரவு அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டை சோதனையிட்டபோது, அங்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X