என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் கமிஷன் உத்தரவு
Byமாலை மலர்10 April 2021 10:02 PM GMT (Updated: 10 April 2021 10:02 PM GMT)
ரதாபாரி தொகுதியின் 149-வது வாக்குச்சாவடியில் வருகிற 20-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்த நேற்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
கவுகாத்தி:
அசாமில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஓரிரு இடங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டன. குறிப்பாக ரதாபாரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டதால் மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த விவகாரத்தில் 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்த தேர்தல் கமிஷன், நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது. இந்தநிலையில், சம்பவம் நடந்த ரதாபாரி தொகுதியின் 149-வது வாக்குச்சாவடியில் வருகிற 20-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்த நேற்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இதைப்போல ஹப்லாங் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மொத்தமே 90 வாக்காளர்கள் இருந்த நிலையில், அங்கு இரு மடங்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. எனவே அந்த வாக்குச்சாவடியிலும் 20-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிது.
இந்த வாக்குச்சாவடிகள் உள்பட அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் 20-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
அசாமில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஓரிரு இடங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டன. குறிப்பாக ரதாபாரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டதால் மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த விவகாரத்தில் 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்த தேர்தல் கமிஷன், நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது. இந்தநிலையில், சம்பவம் நடந்த ரதாபாரி தொகுதியின் 149-வது வாக்குச்சாவடியில் வருகிற 20-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்த நேற்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இதைப்போல ஹப்லாங் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மொத்தமே 90 வாக்காளர்கள் இருந்த நிலையில், அங்கு இரு மடங்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. எனவே அந்த வாக்குச்சாவடியிலும் 20-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிது.
இந்த வாக்குச்சாவடிகள் உள்பட அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் 20-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X