search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் கமிஷன் உத்தரவு

    ரதாபாரி தொகுதியின் 149-வது வாக்குச்சாவடியில் வருகிற 20-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்த நேற்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
    கவுகாத்தி:

    அசாமில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஓரிரு இடங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டன. குறிப்பாக ரதாபாரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டதால் மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த விவகாரத்தில் 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்த தேர்தல் கமிஷன், நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது. இந்தநிலையில், சம்பவம் நடந்த ரதாபாரி தொகுதியின் 149-வது வாக்குச்சாவடியில் வருகிற 20-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்த நேற்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

    இதைப்போல ஹப்லாங் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மொத்தமே 90 வாக்காளர்கள் இருந்த நிலையில், அங்கு இரு மடங்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. எனவே அந்த வாக்குச்சாவடியிலும் 20-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிது.

    இந்த வாக்குச்சாவடிகள் உள்பட அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் 20-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
    Next Story
    ×