என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 மாநில சட்டசபை தேர்தல் : அரசியல் விளம்பரங்களை தடுக்க டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை
Byமாலை மலர்24 March 2021 11:50 PM GMT (Updated: 24 March 2021 11:50 PM GMT)
விரிவான மற்றும் நுணுக்கமான வழிமுறைகள் மூலம் தடைசெய்யப்பட்ட அரசியல் விளம்பரங்களைத் தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:
டுவிட்டர் நிறுவனம் அரசியல் விளம்பரங்களை கடந்த 2019-ம் ஆண்டு தடை செய்தது. தற்போது தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த விளம்பரங்கள் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சில நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழலில் இந்தியா மற்றும் உலக அளவில் நடந்துள்ள முந்தைய தேர்தல்களில் கற்ற பாடங்கள் மூலமாக குறிப்பிடத்தக்க தயாரிப்பு, கொள்கை மற்றும் புதுப்பித்தல்களை நாங்கள் அமல்படுத்தி இருக்கிறோம்’ என்று கூறியுள்ளது. அரசியல் செய்திகள் தானாக சென்றடைய வேண்டும் எனவும், அது வாங்கக்கூடாது எனவும் கூறியுள்ள டுவிட்டர் நிறுவனம், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து விளம்பரங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளது. எனவே விரிவான மற்றும் நுணுக்கமான வழிமுறைகள் மூலம் தடைசெய்யப்பட்ட அரசியல் விளம்பரங்களைத் தடுக்க செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
டுவிட்டர் நிறுவனம் அரசியல் விளம்பரங்களை கடந்த 2019-ம் ஆண்டு தடை செய்தது. தற்போது தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த விளம்பரங்கள் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சில நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழலில் இந்தியா மற்றும் உலக அளவில் நடந்துள்ள முந்தைய தேர்தல்களில் கற்ற பாடங்கள் மூலமாக குறிப்பிடத்தக்க தயாரிப்பு, கொள்கை மற்றும் புதுப்பித்தல்களை நாங்கள் அமல்படுத்தி இருக்கிறோம்’ என்று கூறியுள்ளது. அரசியல் செய்திகள் தானாக சென்றடைய வேண்டும் எனவும், அது வாங்கக்கூடாது எனவும் கூறியுள்ள டுவிட்டர் நிறுவனம், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து விளம்பரங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளது. எனவே விரிவான மற்றும் நுணுக்கமான வழிமுறைகள் மூலம் தடைசெய்யப்பட்ட அரசியல் விளம்பரங்களைத் தடுக்க செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X