என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வருமா?: நிர்மலா சீதாராமன் விளக்கம்
Byமாலை மலர்16 March 2021 2:27 AM GMT (Updated: 16 March 2021 2:27 AM GMT)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அப்பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படுமா என்பது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி :
உற்பத்தி வரி, வாட் வரி உள்ளிட்ட வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜி.எஸ்.டி. வரியாக கடந்த 2017-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன. ஆனால், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை கொண்டு வராததால், அவற்றின் மீது உற்பத்தி வரி, வாட் வரி தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி வரி உயர்வால், எரிபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விலையை கட்டுப்படுத்த எரிபொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு போன்றவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை.
இந்த பொருட்களை எந்த தேதியில் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது என்று மாநிலங்களும் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் சிபாரிசு செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இதுவரை, ஜி.எஸ்.டி. கவுன்சில் அப்படி ஒரு சிபாரிசை செய்யவில்லை.
வருவாயில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து, ஜி.எஸ்.டி. கவுன்சில் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கலாம். அப்படி கொண்டு வந்தால், நாடு முழுவதும் எரிபொருட்கள் மீது ஒரே மாதிரியான வரி விதிப்பு சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மாநிலங்களவையில் நரேந்திர ஜாதவ் என்ற எம்.பி. பேசியதாவது:-
ஏப்ரல் மாதம், கல்வி நிறுவனங்களில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்குகிறது. ஆசிரியர்கள் ஆரோக்கியமாக இருந்து பாடம் நடத்த வேண்டும்.
எனவே, ஆசிரியர்களை முன்கள பணியாளர்களாக வரையறுக்க வேண்டும். அங்கன்வாடி முதல் பல்கலைக்கழகம்வரை அனைத்துவகையான ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி முன்னுரிமை அளித்து போடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உற்பத்தி வரி, வாட் வரி உள்ளிட்ட வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜி.எஸ்.டி. வரியாக கடந்த 2017-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன. ஆனால், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை கொண்டு வராததால், அவற்றின் மீது உற்பத்தி வரி, வாட் வரி தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி வரி உயர்வால், எரிபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விலையை கட்டுப்படுத்த எரிபொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு போன்றவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை.
இந்த பொருட்களை எந்த தேதியில் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது என்று மாநிலங்களும் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் சிபாரிசு செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இதுவரை, ஜி.எஸ்.டி. கவுன்சில் அப்படி ஒரு சிபாரிசை செய்யவில்லை.
வருவாயில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து, ஜி.எஸ்.டி. கவுன்சில் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கலாம். அப்படி கொண்டு வந்தால், நாடு முழுவதும் எரிபொருட்கள் மீது ஒரே மாதிரியான வரி விதிப்பு சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மாநிலங்களவையில் நரேந்திர ஜாதவ் என்ற எம்.பி. பேசியதாவது:-
ஏப்ரல் மாதம், கல்வி நிறுவனங்களில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்குகிறது. ஆசிரியர்கள் ஆரோக்கியமாக இருந்து பாடம் நடத்த வேண்டும்.
எனவே, ஆசிரியர்களை முன்கள பணியாளர்களாக வரையறுக்க வேண்டும். அங்கன்வாடி முதல் பல்கலைக்கழகம்வரை அனைத்துவகையான ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி முன்னுரிமை அளித்து போடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X