search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமர்நாத் யாத்திரை
    X
    அமர்நாத் யாத்திரை

    அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்குகிறது

    இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 1 முதல் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான  அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு நேற்று விவாதித்தது. 

    இதில் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூன் 28-ம் தேதி தொடங்குவது  என்றும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. 

    அமர்நாத் பனிலிங்கத்தை சராசரியாக ஆண்டுதோறும் 3 லட்சம் பேர்  தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×