என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
15-ந் தேதி, அமலாக்கத்துறை முன்பு மெகபூபா முப்தி ஆஜராக தேவையில்லை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்10 March 2021 7:16 PM GMT (Updated: 10 March 2021 7:16 PM GMT)
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
புதுடெல்லி:
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஓராண்டுக்கு மேல் வீட்டுக்காவலில் இருந்த பிறகு சில மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. வருகிற 15-ந் தேதி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மெகபூபா முப்தி மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கின் விவரமோ, தான் குற்றம் சாட்டப்பட்டவரா? சாட்சியா? என்ற விவரமோ இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், அனுப் ஜெயராம் பாம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையை 18-ந் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், 15-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு மெகபூபாவை வற்புறுத்த வேண்டாம் என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X