search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகபூபா முப்தி"

    • கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள் என்றார் மெகபூபா முப்தி.

    ஸ்ரீநகர்:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

    கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் சேருகிறார்கள், அதன்பின் அவர்களுக்கு எதிராக எல்லாமே அழிக்கப்படுகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்பாவிகள்.

    பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள்.

    தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க. என தெரிவித்தார்.

    • இன்னும் எத்தனை தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என எங்களுக்கு தெரியவில்லை.
    • இது தேர்தலையொட்டிள்ள தொடர்பு மட்டுமே. இதன் அர்த்தம் எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதுதான்.

    மக்களவை தேர்தல் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

    இந்தமுறை பா.ஜனதாவை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என 26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதனால் பா.ஜனதா சற்று அச்சம் அடைந்துள்ளது. என்றபோதிலும் 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என இலக்குடன் தேர்தல் பணியில் இறங்கியுள்ளது.

    இதற்கிடையே மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை தங்களுக்கு சாதகமாக பா.ஜனதா பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கு ஏற்ற வகையில் தொடர்ந்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பிக் கொண்டே இருக்கிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான 86 வயதான பரூக் அப்துல்லாவிற்கு ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் பரூக் அப்துல்லா இன்று ஆஜராகவில்லை.

    இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை தேர்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகிவிட்டது என மெகபூபா முப்தி விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறியதாவது:-

    எப்போதெல்லாம் மாநில தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்க தொடங்கிவிடும். ஆகவே, பரூக் அப்துல்லாவிற்கு சம்மன் வழங்கியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    இன்னும் எத்தனை தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என எங்களுக்கு தெரியவில்லை. இது தேர்தலையொட்டிள்ள தொடர்பு மட்டுமே. இதன் அர்த்தம் எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதுதான்.

    இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்குரிய பணம் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக நபர்கள் அல்லாத நபர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. பணம் எடுத்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சிபிஐ கடந்த 2018-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு அமலாக்கத்துறை பரூக் அப்துல்லா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபலுக்குச் மெகபூபா சென்று கொண்டிருந்தார்.
    • முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சங்கம் என்ற இடத்தில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியின் வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், அவர் காயமின்றி உயிர் தப்பினார். 

    தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபலுக்குச் மெகபூபா சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. மெகபூபா சென்றுக் கொண்டிருந்த வாகனம் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மெகபூபாவின் தனிப்பட்ட பாதுகாப்பில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பிடிபி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    • காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சுரான்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் பலியானார்கள்.
    • அதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை ராணுவத்தினர் விசாரணைக்காக பிடித்து சென்றனர்.

    ஸ்ரீநகர்:

    கடந்த 21-ந் தேதி, காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சுரான்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் பலியானார்கள். அதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை ராணுவத்தினர் விசாரணைக்காக பிடித்து சென்றனர். 3 பேரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, நேற்று சுரான்கோட் பகுதிக்கு சென்று, பலியானோர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டு இருந்தார்.

    அவரது பயணத்தை தடுக்கும்வகையில், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி, தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் குற்றம்சாட்டி உள்ளது. அதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

    • 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 4-வது ஆண்டு நிறைவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
    • மெகபூபா முப்தி கட்சியின் கருத்தரங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 4-வது ஆண்டு நிறைவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

    மேலும் மெகபூபா முப்தி கட்சியின் கருத்தரங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    • ஜனநாயகம் எப்படி குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நாடு கண்கூடாக காண்கிறது.
    • எதிர்க்கட்சிகள் அதிகாரத்திற்காக அல்லாமல் கொள்கைகளுக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.

    பாட்னா:

    பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மகாத்மா காந்தியின் இந்தியாவை, கோட்சேவின் நாடாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது என்றார்.

    நாட்டில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், ஜனநாயகம் எப்படி குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நாடு கண்கூடாக காண்பதாகவும், அதனை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வதாகவும் மெகபூபா குறிப்பிட்டார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மற்றொரு முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா பேசும்போது, எதிர்க்கட்சிகள் அதிகாரத்திற்காக அல்லாமல் கொள்கைகளுக்காக ஒன்றிணைந்து, நாட்டில் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

    • பாட்னாவில் 23-ந்தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.
    • இந்த கூட்டத்தில் பங்கேற்க இதுவரை 18 கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    பாட்னா :

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், இம்மாதம் 23-ந் தேதி, எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.

    அதில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி (காங்கிரஸ்), தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), உத்தவ்தாக்கரே (சிவசேனா-உத்தவ்) ஆகியோர் பங்கேற்க ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இத்தகவலை ஐக்கிய ஜனதாதள தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன்சிங் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    இதுவரை 18 கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்த மனுவும் இன்று சூரத் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலத்தின் கோலாரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி? என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் மந்திரி மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ததில், ராகுல் குற்றவாளி என தீர்மானித்து, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா கடந்த மாதம் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது.

    இதற்கிடையே, நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி, சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவும் இன்று நிராகரிக்கப்பட்டது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் மேல் முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறுகையில், ஜனநாயகத்திற்கு இன்று கருப்பு நாள். நீதித்துறை என்பது மக்களின் கடைசி நம்பிக்கை, ஆனால் தாமதமான அதன் பங்கு கேள்விகளை எழுப்பியுள்ளது. இங்குள்ள அரசியல் அமைப்பை ஒழித்துவிட்டு இந்த தேசத்தை அவர்கள் கொள்கைப்படி வழிநடத்த பா.ஜ.க. நினைக்கிறது என தெரிவித்துள்ளார்.

    • தேசிய கொடியையோ, அரசியல் சட்டத்தையோ மாற்றும் திட்டம் இல்லை.
    • தேசிய கொடியை தீய கண்ணுடன் பார்ப்பவர்களை கடுமையாக அணுகுவோம்.

    ஸ்ரீநகர்

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, தற்போதைய தேசிய கொடிக்கு பதிலாக, காவி கொடியை தேசிய கொடியாக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.

    இதற்கு காஷ்மீர் பா.ஜனதா மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் அல்டாப் தாக்கூர் கூறியதாவது:-

    மெகபூபா முப்தி, பிரதமர் மோடிக்கு வளர்ந்து வரும் செல்வாக்கை கண்டு விரக்தியில் பேசி வருகிறார். பா.ஜனதாவை பொறுத்தவரை, 'முதலில் நாடு, இரண்டாவது கட்சி, மூன்றாவதுதான் தனிநபர்' என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. தேசிய கொடிக்காக எந்த தியாகமும் செய்ய பா.ஜனதா தொண்டர்கள் தயாராக உள்ளனர். எனவே, தேசிய கொடியையோ, அரசியல் சட்டத்தையோ மாற்றும் திட்டம் இல்லை. அப்படி சொல்வது அபத்தமானது. தேசிய கொடியை தீய கண்ணுடன் பார்ப்பவர்களை கடுமையாக அணுகுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும், அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர் :

    ஒன்றுபட்ட காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக இருந்தவர், மெகபூபா முப்தி. மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான இவர்தான் காஷ்மீர் மாநிலத்தின் கடைசி முதல்-மந்திரியும் ஆவார்.

    முதல்-மந்திரியாக இவர் பதவி வகித்தபோது அனந்த்நாக் மாவட்டத்தின் கனாபல்லில் உள்ள வீட்டுவசதி வாரியத்தில் இவருக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பிறகும் இன்னும் அவர் அந்த குடியிருப்பை காலி செய்யவில்லை.

    எனவே அனந்த்நாக் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    24 மணி நேரத்தில் அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு அதில் உத்தரவிடப்பட்டு இருந்தது. தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. அனந்த்நாக் மாவட்ட துணை கமிஷனரின் உத்தரவின் பேரில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதைப்போல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும், அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களும் 24 மணி நேரத்துக்குள் காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

    முன்னதாக தலைநகர் ஸ்ரீநகரில் அதிக பாதுகாப்பு நிறைந்த குப்கர் பகுதியில் மெகபூபா முப்திக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு வீட்டை (பேர்வியூ இல்லம்) காலி செய்யுமாறு கடந்த மாதம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அவரது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அந்த பங்களா 6 மாத கால பயன்பாட்டுக்காக 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி கொடுக்கப்பட்டது.
    • அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி வரை, மக்கள் ஜனநாயகக்கட்சித் தலைவர் மெகபூபா முப்தி முதல்-மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர் வசிப்பதற்காக அரசு சார்பில் ஸ்ரீநகரில் குப்கார் சாலையில் அமைந்துள்ள 'பேர்வியூ' பங்களா ஒதுக்கப்பட்டது.

    ஆனால் அவர் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பின்னரும் அந்த பங்களாவை காலி செய்யவில்லை.

    இந்த நிலையில் அவர் அந்த பங்களாவை அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் காலி செய்தாக வேண்டும் என்று காஷ்மீர் அரசினர் எஸ்டேட் துறையினர் வெளியேற்ற உத்தரவு அனுப்பி உள்ளனர்.

    அதில் மெகபூபா, உரிய அங்கீகாரம் இன்றி அந்த பங்களாவைத் தொடர்ந்து தன் வசம் வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    "முதல்-மந்திரி என்ற அடிப்படையில்தான் அந்த பங்களா அவருக்கு 6 மாத கால பயன்பாட்டுக்காக 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி கொடுக்கப்பட்டது. அது 2018-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி நீட்டிக்கப்பட்டது. அடுத்து எந்த நீட்டிப்பும் வழங்கப்படவில்லை" எனவும் அந்த உத்தரவில் கோடிட்டுக்காட்டி உள்ளனர்.

    இந்த நிலையில், அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் அந்த பங்களாவை மெகபூபா காலி செய்யவில்லை என்றால், காஷ்மீர் பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம், 1988 இன் பிரிவு 5-ன் துணைப்பிரிவு (2) -ன் விதிகள் செயல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    • ரிஷி சுனக் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருக்கு அடிக்கடி வருபவர்.
    • இங்கிலாந்து எம்.பி.யானபோது பக்வத் கீதையை கொண்டு வந்து பதவியேற்றார்.

    இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியினர். பெற்றோர் வழி தாத்தாக்கள் அப்போதைய ஒன்றிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள். ரிஷி சுனக் தந்தை யாஷ்வீர் சுனக், இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற மருத்துவர். தாய் உஷா சுனக் மருந்து கடை நடத்தி வந்தார். 1960 ஆம் ஆண்டு கென்யாவில் இருந்து இங்கிலாந்துக்கு ரிஷி சுனக் குடும்பம் குடி பெயர்ந்தது.

    ரிஷி சுனக் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். கர்நாடகாவில் உள்ள இன்போசிஸ் ஐ.டி.நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தியை ரிஷி சுனக் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    ரிஷி சுனக் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருக்கு அடிக்கடி வருகை தந்துள்ளார். யார்க்ஷயர் தொகுதி எம்.பி.யாக அவர் பதவியேற்ற போது கையில் பகவத் கீதையை கொண்டு சென்றிருந்தார். போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக அவர் இருந்தார்.

    இந்தியாவை பல ஆண்டுகள் தங்கள் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்தின் இளம் வயது பிரதமராக பொறுப்பேற்கும் ரிஷி சுனக்கிற்கு இந்தியாவின் பலவேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இது ஒரு நல்ல செய்தி, உலகம் முழுவதும் இந்தியர்கள் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்கும் ரிஷி சுனக், அந்நாட்டை வெற்றிகரமாக வழிநடத்த அவருக்கு ஞானமும் வலிமையும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 


     கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அளித்துள்ள பேட்டியில், 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதாகவும், இந்தியர்களின் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இன்று பல நாடுகளில் இந்தியர்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது, ​​பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்று ஐம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பிரிட்டன் பிரதமராக இங்கிலாந்து ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×