என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை - அகிலேஷ் யாதவ்
Byமாலை மலர்4 March 2021 3:13 PM GMT (Updated: 4 March 2021 3:13 PM GMT)
எங்கள் கட்சியினர் மட்டும் எங்களுக்கு வாக்களித்தாலே நாங்கள் ஜெயித்து விட முடியும் என்று சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் சமாஜ்வாதிக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இப்போது இருந்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஜான்ஸி நகரில் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில்,
மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில்கூட வாக்குச்சீட்டு முறை தான் பயன்படுத்தப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்தப்பட்டு, பலநாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால் இவிஎம் வாக்கு எந்திரங்களுக்கு எதிராக இப்போது சண்டையிட முடியாது.
நாங்கள் இப்போது சட்டப்பேரவைக்குத் தயாராகும் வகையில் பல்வேறு பயிற்சிகளை நடத்தி வருகிறோம். எங்கள் கட்சியினர் மட்டும் எங்களுக்கு வாக்களித்தாலே நாங்கள் ஜெயித்து விட முடியும், பாஜகவைத் தோற்கடிப்போம். மாநிலத்தில் சமாஜ்வாதிக் கட்சி ஆட்சி அமைந்தபின், மின்னணு வாக்கு எந்திரத்தை ஒழிக்கும் முதல் கட்சியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் சமாஜ்வாதிக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இப்போது இருந்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஜான்ஸி நகரில் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில்,
மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில்கூட வாக்குச்சீட்டு முறை தான் பயன்படுத்தப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்தப்பட்டு, பலநாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால் இவிஎம் வாக்கு எந்திரங்களுக்கு எதிராக இப்போது சண்டையிட முடியாது.
நாங்கள் இப்போது சட்டப்பேரவைக்குத் தயாராகும் வகையில் பல்வேறு பயிற்சிகளை நடத்தி வருகிறோம். எங்கள் கட்சியினர் மட்டும் எங்களுக்கு வாக்களித்தாலே நாங்கள் ஜெயித்து விட முடியும், பாஜகவைத் தோற்கடிப்போம். மாநிலத்தில் சமாஜ்வாதிக் கட்சி ஆட்சி அமைந்தபின், மின்னணு வாக்கு எந்திரத்தை ஒழிக்கும் முதல் கட்சியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X