search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    இன்று 4.27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

    இந்தியா முழுவதும் இன்று 4,27,072 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களைத் தொடர்ந்து இன்றில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்டோருக்கும் (ஒருசில நோயுடன் உள்ளவர்கள்) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கியது.

    பாரத பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இன்று 4,27,072 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், இன்று மாலை 7 மணி வரை இதுவரைக்கும் 1,47,28,569 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×