என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் பள்ளத்தாக்கில் 11 மாதத்துக்குப் பிறகு ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கின
Byமாலை மலர்22 Feb 2021 11:08 PM GMT (Updated: 22 Feb 2021 11:08 PM GMT)
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதினொரு மாதங்களுக்குப் பிறகு ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
ஸ்ரீநகர்:
கொரோனா தொற்று காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரெயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பதினொரு மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கி உள்ளன. காஷ்மீரின் ரெயில் சேவை இயக்கம், எளிமையை மேம்படுத்துவதோடு சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ரெயில்வே துறையானது காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மீ்ண்டும் ரெயில் சேவையை 11 மாதங்களுக்கு பிறகு தொடங்கி உள்ளது. பனிகல்-பாரமுல்லா இடையே ஆரம்ப கட்டமாக ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியும், சுற்றுலாத்துறைக்கு ஊக்கமும் அளிக்கக் கூடியதாகும். கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் எப்போது முதல் ரெயில் சேவையை தொடங்குவது என்பதற்கு உறுதியான தேதி எதையும் நிர்ணயிக்க முடியாத சூழல் நிலவியது. இப்போது அடுத்தடுத்த கட்டமாக ரெயில் சேவை அதிகரிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரெயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பதினொரு மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கி உள்ளன. காஷ்மீரின் ரெயில் சேவை இயக்கம், எளிமையை மேம்படுத்துவதோடு சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ரெயில்வே துறையானது காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மீ்ண்டும் ரெயில் சேவையை 11 மாதங்களுக்கு பிறகு தொடங்கி உள்ளது. பனிகல்-பாரமுல்லா இடையே ஆரம்ப கட்டமாக ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியும், சுற்றுலாத்துறைக்கு ஊக்கமும் அளிக்கக் கூடியதாகும். கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் எப்போது முதல் ரெயில் சேவையை தொடங்குவது என்பதற்கு உறுதியான தேதி எதையும் நிர்ணயிக்க முடியாத சூழல் நிலவியது. இப்போது அடுத்தடுத்த கட்டமாக ரெயில் சேவை அதிகரிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே 65 சதவீத ரெயில் சேவை இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் 250 ரெயில்கள் ஜனவரி மாதத்தில் மட்டும் கூடுதலாக இயக்கப்பட்டு உள்ளன. இனி மேலும் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது அனைத்தும் சிறப்பு ரெயில்களாக, முன்பதிவு முறையில் இயக்கப்படுகின்றன. வழக்கமான அனைத்து ரெயில் சேவைகளுக்கான தடை கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25-ந் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X