என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹரியானாவில் 3 முதல் 5-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் வரும் 24-ம் தேதி முதல் திறப்பு
Byமாலை மலர்22 Feb 2021 2:19 PM GMT (Updated: 22 Feb 2021 2:19 PM GMT)
ஒருபக்கம் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்குமோ என் அச்சம் நிலவி வரும் நிலையில், ஹரயானாவில் 24-ந்தேதி முதல் தொடக்கப்பள்ளி வகுப்புகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேரளா, மராட்டியம் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. நாட்டில் தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 74 சதவீதம் மேற்கூறிய மாநிலங்களில் ஏற்படுபவைதான். எனினும் பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாகவே காணப்படுகிறது.
ஆனால், தற்போது மீண்டும் கொரோனா தலைதூக்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களை உஷார்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஹரியானாவில் வரும் 24-ம்தேதி முதல் 3-ம் வகுப்பு முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்களுக்குப் பிறகு துவக்க பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. காலை 10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X