என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூழ்நிலை மோசமானால் லாக்டவுன்: மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
Byமாலை மலர்21 Feb 2021 3:55 PM GMT (Updated: 21 Feb 2021 3:55 PM GMT)
லாக்டவுனை விரும்புவோர் மாஸ்க் இல்லாமல் வெளியில் சுற்றலாம் என மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உறுதி செய்துள்ளார்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருந்தாலும் தீவிர கட்டுப்பாட்டால் வைரஸ் தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தியது.
ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 7 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த மகாராஷ்டிரா மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்று மோசமானால், அதன்பின் லாக்டவுனை நாங்கள் அமல்படுத்த வேண்டும். லாக்டவுனை விரும்புவோர், மாஸ்க் இல்லாமல் சுற்றலாம். லாக்டவுன் வேண்டாம் என்றால், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X