என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கேரளாவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- போதகர் கைது
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. (வயது 74). போதகர். மேத்யூவை அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம், அப்போது தம்பதியின் மைனர் பெண்ணும் அவர்களுடன் செல்வார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி போதகர் வீட்டில் இருந்து அழுதுகொண்டே வந்தார். இது பற்றி பெற்றோர் கேட்டபோது, போதகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இச் சம்பவம் குறித்து பெரும்பாவூர் போலீசில் புகார் செய்தனர். பெரும்பாவூர் டி.ஒய்.எஸ்.பி. ஜெயராஜ், குன்னத்துநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பினுகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அபி ஜார்ஜ் ஆகியோர் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போதகர் மேத்யூவை கைது செய்தனர். பின்னர் அவரை கோழஞ்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்