என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
Byமாலை மலர்20 Feb 2021 11:23 PM GMT (Updated: 20 Feb 2021 11:23 PM GMT)
மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை குறித்து திரைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் சமீப காலமாக அதிக அளவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நாட்டின் இறையாண்மை குறித்து சச்சின் டெண்டுல்கர், அக்ஷய் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்தது பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்காவிட்டால் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமாரின் படங்களை மகாராஷ்டிராவில் திரையிட விட மாட்டோம் என அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் நானா படோலே எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், மும்பை ஜூகுவில் உள்ள அமிதாப் பச்சனின் ஜல்சா பங்களா வீட்டின் முன் நேற்று போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கை தான் இது என தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை குறித்து திரைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் சமீப காலமாக அதிக அளவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நாட்டின் இறையாண்மை குறித்து சச்சின் டெண்டுல்கர், அக்ஷய் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்தது பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்காவிட்டால் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமாரின் படங்களை மகாராஷ்டிராவில் திரையிட விட மாட்டோம் என அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் நானா படோலே எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், மும்பை ஜூகுவில் உள்ள அமிதாப் பச்சனின் ஜல்சா பங்களா வீட்டின் முன் நேற்று போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கை தான் இது என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X