என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விளம்பரத்துக்காக நானா படோலே பேசுகிறார்: தேவேந்திர பட்னாவிஸ் தாக்கு
Byமாலை மலர்20 Feb 2021 1:54 AM GMT (Updated: 20 Feb 2021 1:54 AM GMT)
அமிதாப் பச்சன், அக்சய் குமார் படத்தை திரையிட விட மாட்டோம் என விளம்பரத்துக்காக நானோ படோலே பேசுவதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை :
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வை நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமார் போன்றவர்கள் கண்டிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியிருந்தார்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லையெனில் அவர்களின் படத்தை திரையிடவிடமாட்டோம் என எச்சரித்து இருந்தார்.
மாநில காங்கிரஸ் தலைவாின் இந்த பேச்சு குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், நானா படோலே விளம்பரத்துக்காக இதுபோல பேசுவதாக கூறியுள்ளார். எனவே அதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
தேவேந்திர பட்னாவிசின் இந்த கருத்து குறித்து நானா படோலே கூறுகையில், "அவர் ஆளுங்கட்சி தலைவர் ஆக முடியாமல் எதிர்க்கட்சி தலைவராகி உள்ளாா். எனவே அவர் எதிர்மறையான கருத்தை கூறியுள்ளார். அதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை" என்றார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வை நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமார் போன்றவர்கள் கண்டிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியிருந்தார்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லையெனில் அவர்களின் படத்தை திரையிடவிடமாட்டோம் என எச்சரித்து இருந்தார்.
மாநில காங்கிரஸ் தலைவாின் இந்த பேச்சு குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், நானா படோலே விளம்பரத்துக்காக இதுபோல பேசுவதாக கூறியுள்ளார். எனவே அதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
தேவேந்திர பட்னாவிசின் இந்த கருத்து குறித்து நானா படோலே கூறுகையில், "அவர் ஆளுங்கட்சி தலைவர் ஆக முடியாமல் எதிர்க்கட்சி தலைவராகி உள்ளாா். எனவே அவர் எதிர்மறையான கருத்தை கூறியுள்ளார். அதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை" என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X