search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நானா படோலே, தேவேந்திர பட்னாவிஸ்
    X
    நானா படோலே, தேவேந்திர பட்னாவிஸ்

    விளம்பரத்துக்காக நானா படோலே பேசுகிறார்: தேவேந்திர பட்னாவிஸ் தாக்கு

    அமிதாப் பச்சன், அக்‌சய் குமார் படத்தை திரையிட விட மாட்டோம் என விளம்பரத்துக்காக நானோ படோலே பேசுவதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
    மும்பை :

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வை நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமார் போன்றவர்கள் கண்டிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியிருந்தார்.

    மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லையெனில் அவர்களின் படத்தை திரையிடவிடமாட்டோம் என எச்சரித்து இருந்தார்.

    மாநில காங்கிரஸ் தலைவாின் இந்த பேச்சு குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், நானா படோலே விளம்பரத்துக்காக இதுபோல பேசுவதாக கூறியுள்ளார். எனவே அதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

    தேவேந்திர பட்னாவிசின் இந்த கருத்து குறித்து நானா படோலே கூறுகையில், "அவர் ஆளுங்கட்சி தலைவர் ஆக முடியாமல் எதிர்க்கட்சி தலைவராகி உள்ளாா். எனவே அவர் எதிர்மறையான கருத்தை கூறியுள்ளார். அதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை" என்றார்.

    Next Story
    ×