என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை விமான நிலையத்தில் ரூ.9 கோடி போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது
Byமாலை மலர்18 Feb 2021 11:16 PM GMT (Updated: 18 Feb 2021 11:16 PM GMT)
மும்பை விமான நிலையத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள 3 கிலோ ஹெராயினுடன் வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பை:
மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று காலை தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில் இருந்து தோகா வழியாக விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கானிசைல் பிராமிஸ் கலிஸ்வேயா என்ற பெண் வந்தார். அவரது நடவடிக்கையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் அவரது டிராலி பேக்கில் சோதனை போட்டனர். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 பாக்கெட் ஹெராயின் போதைப்பொருளை மீட்டனர். இதேபோல பெண்ணின் கைப்பையில் இருந்தும் 1 பாக்கெட்டை மீட்டனர்.
அவரிடம் இருந்து மொத்தம் 2 கிலோ 960 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டது. கள்ளச்சந்தையில் இதன்மதிப்பு ரூ.9 கோடி என அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோல பெண்ணிடம் இருந்து 10 ஆயிரம் தென் ஆப்பிரிக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வெளிநாட்டு பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று காலை தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில் இருந்து தோகா வழியாக விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கானிசைல் பிராமிஸ் கலிஸ்வேயா என்ற பெண் வந்தார். அவரது நடவடிக்கையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் அவரது டிராலி பேக்கில் சோதனை போட்டனர். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 பாக்கெட் ஹெராயின் போதைப்பொருளை மீட்டனர். இதேபோல பெண்ணின் கைப்பையில் இருந்தும் 1 பாக்கெட்டை மீட்டனர்.
அவரிடம் இருந்து மொத்தம் 2 கிலோ 960 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டது. கள்ளச்சந்தையில் இதன்மதிப்பு ரூ.9 கோடி என அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோல பெண்ணிடம் இருந்து 10 ஆயிரம் தென் ஆப்பிரிக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வெளிநாட்டு பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X