search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மும்பை விமான நிலையத்தில் ரூ.9 கோடி போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது

    மும்பை விமான நிலையத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள 3 கிலோ ஹெராயினுடன் வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
    மும்பை:

    மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று காலை தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில் இருந்து தோகா வழியாக விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கானிசைல் பிராமிஸ் கலிஸ்வேயா என்ற பெண் வந்தார். அவரது நடவடிக்கையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் அவரது டிராலி பேக்கில் சோதனை போட்டனர். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 பாக்கெட் ஹெராயின் போதைப்பொருளை மீட்டனர். இதேபோல பெண்ணின் கைப்பையில் இருந்தும் 1 பாக்கெட்டை மீட்டனர்.

    அவரிடம் இருந்து மொத்தம் 2 கிலோ 960 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டது. கள்ளச்சந்தையில் இதன்மதிப்பு ரூ.9 கோடி என அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோல பெண்ணிடம் இருந்து 10 ஆயிரம் தென் ஆப்பிரிக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வெளிநாட்டு பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×