என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் 6 நாட்களில் 9,99,065 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்21 Jan 2021 5:34 PM GMT (Updated: 21 Jan 2021 5:34 PM GMT)
இந்தியாவில் கடந்த 6 நாட்களில் 9,99,065 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதன்முதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆறு நாட்களில் 9,99,065 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றைய 6-வவது நாளில் மட்டும் 1,92,581 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 9,99,065 பேருக்கும் 18,159 மையங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 16-ந்தேதி தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் உயிரிழந்தார். ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தியது தொடர்பான அவர் மரணம் அடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X