search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை  (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    கேரளாவில் இன்று புதிதாக 6,004 பேருக்கு கொரோனா தொற்று

    கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 6,004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 65,373 ஆக அதிகரித்துள்ளது.
    கேரளா மாநிலத்தில் இன்று புதிதாக 6,004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.25 லட்சமாக அதிகரித்துள்ளது.

    இன்று 5158 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,56,817 ஆக அதிகரித்துள்ளது.

    ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 65,373 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேர்தில் 69,081 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 8.69 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 86,20,873 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    எர்ணாகுளத்தில் அதிகபட்சமாக இன்று 988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோட்டில் 669 பேரும், கோட்டயத்தில் 589 பேரும், கொல்லத்தில் 528 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×