என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுகாதார காப்பீடு அட்டையை பெற வரிசையில் நின்ற மம்தா பானர்ஜி
Byமாலை மலர்5 Jan 2021 9:45 PM GMT (Updated: 5 Jan 2021 9:45 PM GMT)
சுகாதார காப்பீடு அட்டையை பெற தனது முன்னுரிமையை பயன்படுத்தாமல் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்து நின்று மம்தா பானர்ஜி தனது அடையாள அட்டைடை பெற்றுக்கொண்டார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஸ்வஸ்த்ய சாதி என்னும் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஒரு குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.
கொல்கத்தா மாநகராட்சியில், இந்த காப்பீடு திட்ட அடையாள அட்டை வினியோகம் தொடங்கி உள்ளது. இந்த அட்டையைப் பெறுவதற்காக காலிகட் பகுதியில் நேற்று பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். மம்தா பானர்ஜி அந்த பகுதியில் வசிப்பதால், அவரும் காப்பீடு அட்டை பெற அங்கு வந்தார். அவர் தனது முன்னுரிமையை பயன்படுத்தாமல் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்து நின்று அடையாள அட்டை பெற்றார்.
இதை முக்கிய எதிர்க்கட்சியினரான பா.ஜ.க.வினரும் பாராட்டினர். ‘இதுதான் தர்மமாகும்’ என்று மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் கூறினார்.
இதேபோல நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி பிர்கத் ஹக்கிம், தனது வீட்டின் அருகில் உள்ள மையத்தில் சென்று அடையாள அட்டை பெற்றார். மற்ற மந்திரிகளையும் இந்த திட்டத்தில் சேர்ந்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ள மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஸ்வஸ்த்ய சாதி என்னும் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஒரு குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.
கொல்கத்தா மாநகராட்சியில், இந்த காப்பீடு திட்ட அடையாள அட்டை வினியோகம் தொடங்கி உள்ளது. இந்த அட்டையைப் பெறுவதற்காக காலிகட் பகுதியில் நேற்று பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். மம்தா பானர்ஜி அந்த பகுதியில் வசிப்பதால், அவரும் காப்பீடு அட்டை பெற அங்கு வந்தார். அவர் தனது முன்னுரிமையை பயன்படுத்தாமல் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்து நின்று அடையாள அட்டை பெற்றார்.
இதை முக்கிய எதிர்க்கட்சியினரான பா.ஜ.க.வினரும் பாராட்டினர். ‘இதுதான் தர்மமாகும்’ என்று மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் கூறினார்.
இதேபோல நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி பிர்கத் ஹக்கிம், தனது வீட்டின் அருகில் உள்ள மையத்தில் சென்று அடையாள அட்டை பெற்றார். மற்ற மந்திரிகளையும் இந்த திட்டத்தில் சேர்ந்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ள மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X