என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசியல் நோக்கங்களுடன் கோவில்கள், சிலைகள் தாக்கப்படுகின்றன - ஜெகன்மோகன் ரெட்டி
Byமாலை மலர்5 Jan 2021 7:54 PM GMT (Updated: 5 Jan 2021 7:54 PM GMT)
அரசியல் நோக்கங்களுடன் கோவில்கள் மற்றும் சிலைகள் தாக்கப்படுகின்றன என ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அமராவதி:
ஆந்திர பிரதேசத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் ராமதீர்த்தம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடவுள் ராமர் சிலையை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தி இருந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு இந்து சிலையை மர்ம நபர்கள் சிலர் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர்.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமகேந்திரவரம் நகரில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அதில், சுப்ரமண்யேஸ்வர கடவுளின் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் சிலர் கடந்த 1-ம் தேதி அதிகாலையில் அதனை தாக்கி சேதப்படுத்தி இருக்கின்றனர்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் துர்க பிரசாத் கூறுகையில், அதிகாலை 3 மணிவரை நாங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டோம். அதுவரை எந்த சம்பவமும் நடைபெறவில்லை. எனினும், காலை 5 மணியளவில் வந்த கோவில் பூசாரி, சிலை உடைந்து இருப்பது பற்றி கண்டறிந்துள்ளார்.
அதனால் இந்த சம்பவம் அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணிக்குள் நடந்திருக்க கூடும். சி.சி.டி.வி. கேமிராக்கள் இருந்தபோதிலும், அவை இந்த சிலையை நோக்கி வைக்கப்படவில்லை. நாங்கள் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். ஆனால் அதில் பயன் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதேபோல், சீதா தேவி சிலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
ஆந்திராவில் கோவில் சிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசியல் நோக்கங்களுடன் கோவில்கள் மற்றும் சிலைகள் தாக்கப்படுகின்றன என ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், ஆந்திர பிரதேசத்தில் ஒரு புதிய வகையான அரசியல் கொரில்லா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் நோக்கங்களுடன் நள்ளிரவில், மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் கோவில்களும், சிலைகளும் தாக்கப்படுகின்றன. சிலைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X