என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருமானவரி தாக்கல் கடைசி தேதி நீட்டிப்பு - ஜனவரி 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்
Byமாலை மலர்30 Dec 2020 6:53 PM GMT (Updated: 30 Dec 2020 6:53 PM GMT)
வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 3-வது முறையாக நீட்டித்துள்ள மத்திய அரசு, வருகிற ஜனவரி 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
2019-20-ம் நிதியாண்டுக்கு தனிநபர்கள் வருமானவரிதாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 3-வது முறையாக நீட்டித்துள்ள மத்திய அரசு, வருகிற ஜனவரி 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் வருமானவரிகணக்கு தணிக்கை செய்யப்படவேண்டிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசித்தேதியும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, வருகிற பிப்ரவரி 15-ந் தேதிவரை அவர்கள் கணக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக வருமானவரிசெலுத்துவோர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கடைசித்தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிதியாண்டில் கடந்த 28-ந் தேதி வரை 4.54 கோடி வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 4.77 கோடியாக இருந்தது.
2019-20-ம் நிதியாண்டுக்கு தனிநபர்கள் வருமானவரிதாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 3-வது முறையாக நீட்டித்துள்ள மத்திய அரசு, வருகிற ஜனவரி 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் வருமானவரிகணக்கு தணிக்கை செய்யப்படவேண்டிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசித்தேதியும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, வருகிற பிப்ரவரி 15-ந் தேதிவரை அவர்கள் கணக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக வருமானவரிசெலுத்துவோர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கடைசித்தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிதியாண்டில் கடந்த 28-ந் தேதி வரை 4.54 கோடி வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 4.77 கோடியாக இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X