என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீண்டும் வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி - மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பதாக புகார்
Byமாலை மலர்9 Dec 2020 1:07 AM GMT (Updated: 9 Dec 2020 1:07 AM GMT)
வனப்பகுதியில் வசித்துவந்த மக்களை சந்திக்கச் செல்ல முயன்ற தன்னை மீண்டும் வீட்டுக்காவலில் வைத்துவிட்டதாக மெகபூபா நேற்று குற்றம்சாட்டினார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபிறகு அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 14 மாதங்களுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். கடந்த வாரம், தான் மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக மெகபூபா குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், பட்காம் மாவட்டத்தில் வனப்பகுதியில் வசித்துவந்த மக்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்களை சந்திக்கச் செல்ல முயன்ற தன்னை மீண்டும் வீட்டுக்காவலில் வைத்துவிட்டதாக மெகபூபா நேற்று குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் தனது வீட்டுக்குள்ளிருந்து வெளியிட்ட ஒரு வீடியோவில், ‘நான் மக்களைச் சந்திக்க முயலும்போதெல்லாம் என்னை அரசாங்கம் தடுப்புக்காவலில் வைப்பது வழக்கமாகிவிட்டது. அவர்கள் கூறுவதுபோல காஷ்மீரில் இயல்புநிலை நிலவுவது உண்மை என்றால், என்னை தடுத்து வைப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்களை கதவை திறக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வீடியோவுக்கு முன்பாக டுவிட்டரில் மெகபூபா வெளியிட்ட செய்தியில், ‘காஷ்மீரில் கேள்வி எழுப்புபவர்களை அடக்கமுறையின் மூலம் ஒடுக்கவே மத்திய அரசாங்கம் விரும்புகிறது’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபிறகு அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 14 மாதங்களுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். கடந்த வாரம், தான் மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக மெகபூபா குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், பட்காம் மாவட்டத்தில் வனப்பகுதியில் வசித்துவந்த மக்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்களை சந்திக்கச் செல்ல முயன்ற தன்னை மீண்டும் வீட்டுக்காவலில் வைத்துவிட்டதாக மெகபூபா நேற்று குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் தனது வீட்டுக்குள்ளிருந்து வெளியிட்ட ஒரு வீடியோவில், ‘நான் மக்களைச் சந்திக்க முயலும்போதெல்லாம் என்னை அரசாங்கம் தடுப்புக்காவலில் வைப்பது வழக்கமாகிவிட்டது. அவர்கள் கூறுவதுபோல காஷ்மீரில் இயல்புநிலை நிலவுவது உண்மை என்றால், என்னை தடுத்து வைப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்களை கதவை திறக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வீடியோவுக்கு முன்பாக டுவிட்டரில் மெகபூபா வெளியிட்ட செய்தியில், ‘காஷ்மீரில் கேள்வி எழுப்புபவர்களை அடக்கமுறையின் மூலம் ஒடுக்கவே மத்திய அரசாங்கம் விரும்புகிறது’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X