search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ரூ.8 ஆயிரம் கோடி செலவில் ஆக்ராவில் மெட்ரோ ரெயில் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ரூ.8 ஆயிரத்து 380 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ரூ.8 ஆயிரத்து 380 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

    ஆக்ராவின் முதலாவது மெட்ரோ ரெயில் திட்டம் இதுவே ஆகும். மொத்தம் 30 கி.மீ. தூரத்துக்கு 2 வழித்தடங்களாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. தாஜ்மகால், ஆக்ரா கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை ரெயில் மற்றும் பஸ் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்படுகிறது.

    5 ஆண்டுகளில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம், ஆக்ராவில் வசிக்கும் சுமார் 26 லட்சம் பேருக்கு மட்டுமின்றி, ஆக்ராவுக்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கும் பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×